பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வு வயதை 60 என்பதில் இருந்து 58 ஆகக் குறைக்கும் முடிவைக் கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2000 ஆவது ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டபோது, இந்நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதாக அளித்த உறுதி மொழியை காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகத்தில் 18 பிஎஸ்என்எல் மாவட்டங்களை 11 ஆக குறைக்கும் வகையில் சில மாவட்டங்களை அருகாமை மாவட்டங்களுடன் இணைப்பதென்று பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.